அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புதுமடம் செய்தி மற்றும் தங்களின் ஆக்கங்களை இவ்விணையதளத்தில் வெளியிட இன்றே கீழ் காணும் மின்னஞசல் முகவரிக்கு தங்களின் மின்னஞசலை அனுப்பி வைக்கவும்.





mail@pdmnews.com
__________________
இது வரை நமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை

முகநுால்

டுவிட்டர்

Blogger இயக்குவது.
வியாழன், அக்டோபர் 03, 2013




எதிர் வரும் 06.10.2013 ,20.10.2013 மற்றும் 27.10.2013 ஆகிய நாட்களில் ஏற்கனவே அமைக்கபட்ட வாக்குசாவடி மையங்களில் வாக்காளர் பட்டியளில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் நடைப்பெற உள்ளது இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வாக்களர் பட்டியளில் உள்ள குறைகளை நிவர்தி செய்து கொள்ளவும்.

பொதுமக்களிடம் படிவம் 6,7 ,8 ,8A
ஞாயிறு, ஆகஸ்ட் 25, 2013
வரும் 27.8.2013 அன்று புதுமடம் கிராமம்  கூடத்தில் வருமான சான்றிதழ்  இருப்பிட சான்றிதழ் சாதி சான்றிதழ் விதவை சான்றிதழ்  ஆண்வாரிசு இல்லை என சான்றிதழ் முதியோர் உதவி தொகை முழுபுலம் வாரிசு சான்றிதழ் முதல் பட்டதாரி சான்றிதழ்  கு்டும்ப அட்டை திருத்தம் சிட்டா நகல் ஆகிய சான்றிதழ் அன்றே வழங்கப்படும்  என தெரிவிக்கப் படுகிறது.



 கிராம நிர்வாக அலுவலகம்.
செவ்வாய், மார்ச் 26, 2013
கர்நாடகா பவர் கார்ப்பரேஷன் நிறுவனம் தொழில்துறை சார்ந்தவர்களுக்காக, சூரிய மின் சக்தியின் மூலம் தொழில்துறை பெறக்கூடிய அம்சங்கள் பற்றிய 6 நாள் பயிற்சி முகாமை நடத்துகிறது.

மத்திய அமைச்சகத்தின் துணையுடன் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புக்கு ஆர்வமுடைய தொழில்முனைவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பயிற்சி முகாம் நடைபெறும் நாட்கள்: 01 ஏப்ரல் 2013 முதல் 06 ஏபரல் 2013 வரை.

மேலும் விபரங்களுக்கு www.karnatakapower.com என்ற இணையதளத்தை காணவும்.

- Thanks to dinamalar



கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில், பி.எச்டி.,யில் பல்வேறு பொறியியல் படிப்புகளில் சேர, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.



வழங்கப்படும் படிப்புகள்:

பி.எச்டி., (ஏரோஸ்பேஸ், பயாலஜிகல் சயின்ஸ் அன்ட் பயோ-இன்ஜினியரிங், கெமிக்கல், சிவில், கம்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், மெட்டிரியல் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங், மெக்கானிக்கல், போட்டோனிக் அன்ட் இன்ஜினியரிங்)

தகுதி: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் முதுகலை பட்டப்படிப்பில் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளநிலை பட்டப் படிப்பில் 75 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் மூலம் ஆன்லைன் வழியாக  விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.400ம், எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.200ம் வரைவோலை செலுத்த வேண்டும்.

GATE / UGC / CSIR ஆகிய நுழைவுத்தேர்வுகளில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஏப்ரல் 8ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரிவான தகவல்களுக்கு www.iitk.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

- நன்றி தினமணி

2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக 15.04.2013. பி.ப 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Source : tntjsw.net


சனி, மார்ச் 23, 2013
காலனி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டுக் கல்வி நிறுவனம், தனது இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.


படிப்பு விபரங்கள் :

முதுநிலைப் படிப்புகள் (2 வருடங்கள்) : Fashion merchandising & Retail management Footwear design & Production management Creative design and CAD/CAM

இளநிலைப் படிப்புகள் (4 வருடங்கள்) : Fashion design Footwear design & Production management Leather goods & Accessories design

இன்டக்ரேட்டட் படிப்புகள் (5 வருடங்கள்) : Business management Retail management

இவை தொடர்பான Prospectus, இக்கல்வி நிறுவன வளாகம் மற்றும் இந்தியா முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்சிஸ் வங்கி கிளைகள் ஆகியவற்றில் கிடைக்கும். ரூ.500 கொடுத்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

இதர அனைத்து விரிவான விபரங்களுக்கும் www.fddiindia.com என்ற வலைத்தளம் செல்க...

Thanks to dinamalar


அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்" வழியாக விண்ணப்பிக்கலாம்" என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத்தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்ததேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் (www.tnpsc.gov.in) வழியாக,துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

Source : tntjsw
புதன், மார்ச் 20, 2013
JAL International Company என்ற வளைகுடாவை சேர்ந்த கட்டுமான மற்றும் தொழில்நுட்ப உதவி சேவை அளிக்கும் நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட பணிகளுக்கானநேர்முகத் தேர்வு சென்னை, கொச்சின், மும்பை உள்ளிட்ட நகரங்களில் மார்ச் மாதம்13 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 21 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. எனவேஇப்பணிகளுக்கு ஏற்ற கல்வி தகுதி உடையோர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் தகவல்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளநிறுவனத்தின் இணையதள முகவரியையும், இணைப்பையும் பார்வையிடவும்...

இணையதள முகவரி : http://www.jalinternational.com.sa/
Source : tntjsw
திங்கள், மார்ச் 18, 2013

ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் குண்டு வெடித்து 17 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பை நடத்தியவர்கள் யார்? என புலனாய்வு செய்து கண்டு பிடிப்பதற்கு பதிலாக எடுத்த எடுப்பில் முஸ்லிம்கள்தான் இதைச் செய்தனர் என்று முடிவு செய்துவிட்ட போலீசாரும், ஊடகங்களும் இது சம்பந்தமான பெய்ச் செய்திகளை கசிய விட்ட வண்ணம் உள்ளனர். கோவையில் இருந்து கேரளா நோக்கி மினி லாரி ஒன்று சென்றதாம்! அந்த லாரியில் 5 டன் அம்மோனியம் நைட்ரேட் இருந்ததாம்! அந்த மினி லாரியை கேரள மாநில மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல்கரிம் என்பவர் ஓட்டிச் சென்றாராம்! இந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார் கோவை – கேரளாவைத் தகர்க்கும் சதித் திட்டத்தில் இந்த வெடி மருந்துகள் கடத்தப்பட்டதா? என்பது குறித்து கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என 25-02-13 அன்று தினத் தந்தி செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தி மூலம் ஹைதராபாத்தில் குண்டு வைத்தது முஸ்லிம்கள்தான் என பிற சமூக மக்களிடம் பதிய வைத்தாயிற்று.
ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கும், அப்துல் கரிமுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரை கேரள போலீசாரோ, என்.ஐ.ஏ.போலீசாரோ கைது செய்யுவும் இல்லை; விசாரிக்கவும் இல்லை என்ற உண்மையை தினத் தந்தி சொன்னதா? இல்லை.
ஹைதராபாத் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது ஆதம். சோமாலியா நாட்டைச் சேர்ந்த அப்துல்லா உம்ரன் மக்ரன் ஆகிய இருவர் பீகார் மாநிலத்தில் இருந்து நேபாள எல்லைக்குள் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டதாக 25-02-13 அன்று செய்தி வெளியிட்ட தினத் தந்தி, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு லேப்டாப், பேனா, கேமரா செல், ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், ஐதராபாத்-செகந்ராபாத் நகர படங்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. இதன் மூலம் ஹைதராபாத் குண்டு வெடிப்பை முஸ்லிம்கள்தான் நடத்தினார்கள் என அப்பாவி மக்களை நம்ப வைத்தது தினத் தந்தி. தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள் அனைவரும் லேப்டாப், பேனா, கேமரா செல், டிரைவிங் லைசென்ஸ், ஊரின் வரை படங்கள் வைத்துள்ளனர். இவையெல்லாம் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என்று யாராவது சொல்வார்களா? முஸ்லிம்களோடு சம்பந்தப்படுத்தி, இந்த பொருட்களும் தீவிரவாதிகளின் ஆயுதங்கள் என தினத்தந்தி காட்ட முயலுகிறது.
ஆந்திர மாநில பி.ஜே.பி.யின் தலைவராக கிரன் ரெட்டி என்பவர் இருக்கிறார். அவருக்கு ஒரு மர்மக் கடிதம் வந்ததாம்! அந்தக் கடிதத்தில் ‘ஹைதராபாத்தில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது நாங்கள் தான். எங்களது அடுத்த தாக்குதல் ஹைதராபாத்தின் பேகம் பஜார் தான்’ என்று குறிப்பிட்டு இருந்ததாம். இந்த கடிதம் பி.ஜே.பி.யின் செட்டப் நாடகம் என இப்போது சிலர் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால் மதுரை தினகரன் 25-02-13 அன்று இந்த கடிதத்தின் சாராம்சத்தை வெளியிட்டு குண்டு வெடிப்பு என்றால் முஸ்லிம்கள் என அப்பாவி மக்களின் மனதில் பதிய வைத்துவிட்டதே! இந்தப் பதிவை யார் அப்புறப்படுத்துவது?
ஹைதராபாத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெடி பொருட்களுடன் நுழைந்து விட்டனர். அதனால் காவல்துறை சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது என்று அதே நாளின் முதல் பக்கத்தில் தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டு குமரி மாவட்ட முஸ்லிம்களை கதி கலங்க வைத்ததே! அந்த கலங்கத்தை யார் தான் போக்க முடியும்? கடைசியில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்யது மக்பூல், இம்ரான் கான், மற்றும் நெல்லூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு முஸ்லிம்கள்தான் ஹைதராபாத் குண்டு வெடிப்புக்கு காரணம் என்று 4-3-13 அன்று தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதே! இதை எங்கு போய் சொல்வது?
ஜெயிலில் இருந்து இவர்கள் வெடிகுண்டு வெடிப்பை நடத்தினார்கள் எனில் இவர்களுக்கு ஜெயில் அதிகாரிகள் துணை புரிந்துள்ளார்கள் என்று அர்த்தமாகிறது. இந்த ஜெயில் அதிகாரிகளை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தினமலர் சொல்லுமா? சொல்லவே சொல்லாது. இந்தச் செய்தி உண்மையாக இருந்தால் அல்லவா தினமலர் அப்படிச் சொல்லும். அது பொய் என்று தினமலருக்கு நன்கு தெரியும் போது அது எப்படி இவ்வாறு சொல்லும்?
இவர்களின் நோக்கம் குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிப்பதல்ல. மாறாக முஸ்லிம்கள் மீது குண்டு வெடிப்பு பழியை தூக்கிப் போட வேண்டும். குண்டு வைத்த உண்மையான குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டும் என்பதே! இதுதான் இவர்களின் நோக்கம் எனும் போது பத்திரிகை தர்மம் எப்படி காக்கப்படும்? இந்தியா எப்படி உருப்படும்? என்று ஒவ்வொரு இந்திய மக்களின் உள்ளத்திலும் கேள்வி எழத்தானே செய்யும்!
Source : tntj.net


திங்கள், மார்ச் 11, 2013
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அடகு வைத்த 500 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமநாதபுரம் கண்ணன் கோவிலைச் சேர்ந்த குலாம் என்பவரும் அவரது மனைவி சீனியம்மாளும் சேர்ந்து, ராமநாதபுரம், புதுமடம், பெரியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த வட்டிக்கு பணம் வாங்கித் தருவதாகக் கூறி 500 சவரன் தங்க நகைகளை மோசடி செய்துள்ளனர்.

இதுகுறித்து கீழக்கரையைச் சேர்ந்த உமுல்கசியா என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தம்பதியைக் கைது செய்தனர்.

நன்றி : புதியதலைமுறை